பாகிஸ்தானில் கனமழை !

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 3 நாட்களாக பஞ்சாப், கைபர் பக்துவா, பலூசிஸ்தான் உள்ளிட்ட மாகாணங்களில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக சில மாகாணங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை, வெள்ளம், மின்னல் போன்ற இயற்கை பேரிடர்களால் இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன் காரணமாக பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். கனமழை மேலும் சில நாட்கள் நீடிக்கலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

You May Also Like

More From Author