105 ஆண்டுகால முயற்சியில், கட்சியின் தலைமையில் ஊன்றி நின்று அதனை மேம்படுத்தும் அமைப்பு முறை மற்றும் பணி முறையைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி உருவாக்கியுள்ளது. சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றுவதில் இது ஈடிணையற்ற பங்களிப்பை ஆற்றியுள்ளது. சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நிறுவனம் உலகின் 41நாடுகளைச் சேர்ந்த 11ஆயிரத்து 521 இணையப் பயனர்களிடையில் கருத்து கணிப்பு ஒன்றை நடத்தியது. அதன் முடிவின்படி, மேலை நாடுகளின் அரசியல் கட்சிகள் பகுதியான வாக்களர்களின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதால், குறுகிய கால கொள்கை மற்றும் சமூகத்தின் பிளவு எளிதாக ஏற்படுத்தப்படுமென 61.3விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர். இக்கருத்து கணிப்பில் பங்கேற்ற இந்தியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா மற்றும் நைஜீரிய சேர்ந்தவர்களில் 70விழுக்காட்டுக்கும் மேலானோர் இதற்கு ஒப்புக்கொண்டனர்.
