கனடா டொராண்டோ திருவிழாவில் பயங்கர துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி, 6 பேர் காயம், கொலையாளி தலைமறைவு  

Estimated read time 0 min read

கனடாவின் மிகப்பெரிய நகரமான டொராண்டோவில் ஆண்டுதோறும் நடைபெறும் புகழ்பெற்ற சல்சா ஆன் செயின்ட் கிளேர் வீதித் திருவிழாவில் நடந்த பயங்கரத் துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் 6 பேர் துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்த நிலையில் படுகாயமடைந்துள்ளனர்.
திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், திடீரென புகுந்த மர்ம நபர் நடத்திய இந்த கண்மூடித்தனமான தாக்குதல் ஒட்டுமொத்த கனடா நாட்டையும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.

You May Also Like

More From Author