40 டிகிரி வரை எகிறும் வெயில்: சென்னை மற்றும் மதுரையில் சுட்டெரிக்கும் வெப்பம்  

Estimated read time 0 min read

தமிழ்நாட்டில் கோடைக்காலத்தை போல நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் அடுத்த சில தினங்களுக்கான வானிலை எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக, மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இயல்பை விட சுமார் 5 டிகிரி வரை வெப்பம் அதிகரித்துள்ளதால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வெளியில் வரமுடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட சுமார் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author