தென்காசி மாவட்டத்திற்கு ஜூலை 28 உள்ளூர் விடுமுறை

Estimated read time 0 min read

சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி ஆடித்தபசு விழாவை ஒட்டி ஜூலை 28 உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பிரசித்திபெற்ற கோயில் திருவிழாக்கள் முக்கியமான ஒன்று திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் சங்கரநாராயணர் ஆலய ஆடி தபசு விழா. ஆடிதபசு விழா என்பது புராண கால பெருமை மிக்கது .அதுமட்டுமல்ல சைவ வைஷ்ணவ தூவேஷத்தையும் சிவன் – விஷ்ணு இருவரில் யார் பெரியவர் என்ற அவசியமற்ற சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கவும் விரும்பியனாள் அம்பிகை. அவரது வேண்டுகோளை ஏற்று சிவபெருமான் அளித்த காட்சியின் சாட்சியாக நடைபெறுவது தான் ஆடிதபசு விழா. அண்ணன் நாராயணரும் கணவர் சங்கரரும் அதாவது ஹரியும் சிவனும் ஒருவரே என்பதே உலகிற்கு உணர்த்த அம்பிகை மேற்கொண்ட தவத்திற்கு அதாவது தபசுக்கு பலன் கிடைத்த நாள் ஒரு ஆடி பௌர்ணமி தினத்தில் தான். அதுவே ஆதிகாலத்தில் இருந்து ஆடி தபசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணர் கோயில் ஆடித்தபசு விழாவை ஒட்டி வரும் 28ம் தேதி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஆகஸ்ட் 1 (சனிக்கிழமை) வேலை நாள், ஜூலை 28 அன்று அரசு தேர்வுகள் இருப்போருக்கு உள்ளூர் விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளர்.

You May Also Like

More From Author