உக்ரைன் நடத்திய வான்வழித் தாக்குதல்களால் தங்களது சொந்த நாட்டு எரிபொருள் சுத்திகரிப்பு நிலையங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் பெட்ரோல் விநியோகத்திற்காக ரஷ்யா இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்களை அணுகியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இது இரு நாடுகளுக்கு இடையிலான எரிசக்தி வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள ஒரு அரிய தலைகீழ் மாற்றமாகக் கருதப்படுகிறது.
ஏனெனில், உக்ரைன் போருக்குப் பின் ரஷ்யாவிடமிருந்து அதிகளவில் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடாக இந்தியா இருந்து வரும் நிலையில், தற்போது ரஷ்யா இந்தியாவிலிருந்து சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை கேட்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவில் எரிபொருள் தட்டுப்பாடு: இந்தியாவிலிருந்து பெட்ரோல் இறக்குமதி செய்ய ரஷ்யா முயற்சி
