ஷிச்சின்பிங்கின் கருத்துகள் சீனாவின் ஆட்சிமுறை பற்றிய எனும் நூலின் 5ஆவது தொகுதிக்கான பரப்புரை நடவடிக்கை ஜூலை 15ஆம் நாள் கசகஸ்தானில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய கசகஸ்தான் அரசுத் தலைவர் மாளிகையின் உள்நாட்டுக் கொள்கைத் துறையின் தலைவர் யெர்னூல் பெசெம்பாயே, இந்தப் பரப்புரை நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையில் நாகரிகப் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர கற்றலுக்கான புதிய மைல்கல்லாகத் திகழ்வதாகப் பாராட்டு தெரிவித்தார். மேலும், கசகஸ்தானில் தொடர்ச்சியான பொருளாதாரம் மற்றும் சமூகச் சீர்திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், நவீனமயமாக்க முன்னேற்றப் போக்கில் இரு நாடுகளுக்கிடையில் பல ஒத்த நிலைமைகள் காணப்படுவதாகவும் தெரிவித்தார். அதோடு, ஷிச்சின்பிங்கின் இப்படைப்பில் கூறப்பட்டுள்ள ஆட்சிமுறை தத்துவம் மற்றும் வளர்ச்சி நெடுநோக்கு, கசகஸ்தானுக்கு மிகவும் அரியதாகும் என்றும் அவர் கூறினார்.
