சிட்சாங்கின் கியிரோங்கில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழப்பு

சீனாவின் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேச அரசின் தகவல் அலுவலகம் செப்டம்பர் 2ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, அன்று மதியம் 12 மணி வரை, நேபாள மண்சரிவு பேரழிவால் சிட்சாங்கின் கியிரோங் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 21 பேர் உயிரிழந்துள்ளனர், 541 பேர் காணாமல் போயுள்ளனர். சிட்சாங் அரசு பல்வேறு துறைகளைச் சேர்ந்த மீட்புக் குழுக்களை ஒருங்கிணைத்து, மக்களைத் தேடுதல் மற்றும் மீட்புதவி, சாலைகளைச் சீரமைத்தல், பேரிடர் நீக்கம், ஆபத்துத் தடுப்பு உள்ளிட்ட பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டுள்ளது. தற்போது பேரிடர் நீக்கம் மற்றும் அவசர மீட்புதவி பணிகள் ஒழுங்காகவும் பயனுள்ளதாகவும் நடைபெற்று வருகின்றன.

 

You May Also Like

More From Author