மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகப் பெருவிழா நெருங்கி வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம்-ஒழுங்கு பணிகள் குறித்து மாநில காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
வரும் 17-ஆம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ள கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, மதுரை மாநகர காவல் ஆணையர் எஸ். ராஜேந்திரன் மற்றும் மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் DGP மகேஷ் குமார் அகர்வால் தீவிர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், கோயில் வளாகம் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளில் செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்கான வியூகங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாக விவாதிக்கப்பட்டது. மேலும், குற்றச் செயல்களைத் தடுக்கும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர ரோந்துப் பணிகள் மற்றும் காவல்துறை செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்தார்.
காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் இன்று (14.09.2026) மதுரைக்கு வருகை தந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. எஸ். ராஜேந்திரன், IPS மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன், 17.09.2026 அன்று நடைபெற உள்ள மீனாட்சி அம்மன் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடினார். மேலும், மதுரை மாநகர காவல்துறையின் பல்வேறு காவல் பணிகள் மற்றும் நடை ரோந்து உள்ளிட்ட முன்னெச்சரிக்கை சார்ந்த செயல்பாடுகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார். The Director General of Police / Head of Police Force, Dr. Mahesh Kumar Aggarwal, IPS, visited the Madurai today (14.09.2026) and held discussions with the Commissioner of Police, Madurai City, Thiru S. Rajendran, IPS, and senior police officers on the security arrangements for Meenakshi Amman Temple Maha Kumbabhishekam on 17.09.2026. Discussions were also held on various policing activities, ongoing pro-active policing measures like foot patrolling etc. @Mdu_CityPolice
— Tamil Nadu Police (@tnpoliceoffl) September 14, 2026
“>
கும்பாபிஷேகத்தை எந்தவிதத் தடையுமின்றி அமைதியாகவும் பாதுகாப்பாகவும் நடத்தி முடிக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் துரிதப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
