இந்தியா- ஓமன் கடலோர காவல்படை ஆலோசனைக் கூட்டம்!

இந்திய கடலோர பாதுகாப்பு படை மற்றும் ராயல் ஓமன் கடலோர பாதுகாப்பு படை இடையே 5ஆவது வருடாந்திர உயர்மட்ட கூட்டம் புதுடெல்லியில் நடைபெற்றது.

கடல் பகுதியில் நடைபெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தவும் இந்த கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டது.

இதில், இந்தியக் கடலோர காவல்படையின் தலைமை இயக்குநர் ராகேஷ் பால், ராயல் ஓமன் தூதுக்குழுவுக்கு உதவி கமாண்டிங் அதிகாரி கர்னல் அப்துல் அஜீஸ் முகமது அலி அல் ஜப்ரி ஆகியோர் கலந்து கொண்டனர்.

You May Also Like

More From Author