இந்திய நாடாளுமன்றத்தின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக, லோக்சபாவின் உறுப்பினர் எண்ணிக்கையை 850 ஆக உயர்த்தும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா உள்ளிட்ட மூன்று முக்கிய மசோதாக்கள் இன்று (ஏப்ரல் 16) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
2029 பொதுத்தேர்தலில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை உறுதி செய்வதற்காக இந்த அதிரடி மாற்றங்களை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
இருப்பினும், தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான இந்த நடவடிக்கை தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பலத்தை குறைக்கும் என்று எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இன்று கூடுகிறது சிறப்பு நாடாளுமன்ற கூட்டம்: 3 முக்கிய மசோதாக்கள் தாக்கல்
