சென்னை,ஜூலை 6- தமிழ்நாடு யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் (டியூஜே) சங்கத்தின் மாநில தலைவராகச் செயல்பட்டு வந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமன் கடந்த 27.06.2026 அன்று காலமானார். அதைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினரின் சார்பில் முகலிவாக்கத்தில் உள்ள தோழரின் இல்லத்தில் ஞாயிறன்று (ஜூலை5) அவரது உருவப் படம் திறப்பு மற்றும் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்குச் சென்னை மாவட்ட டி.யூ.ஜே. கௌரவ தலைவரும், சன் டி.வி.யின் முன்னாள் செய்தி ஆசிரியருமான உ. மைக்கேல் ஜார்ஜ் தலைமை தாங்கினார். தோழர் புருஷோத்தமனின் மைத்துனரான வி.மோதிலால் முன்னிலை வகித்தார். இதில் தமிழ்நாடு எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, தோழர் பி.எஸ்.டி. புருஸோத்தமனின் உருவபடத்தை திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் பேசுகையில், சமுதாயத்தில் நடுநிலையாக செயல்படக்கூடிய பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளது என்றும், அத்தகைய நடுநிலையானவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதை தான் எப்போதும் சுட்டிக்காட்டி வருவதாகவும் குறிப்பிட்டார். குறிப்பாக இருபது வருடங்களுக்கு முன்பு இருந்த எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது தற்போது அது குறைந்துள்ள சூழலில், தோழர் புருஷோத்தமன் போன்ற சிறந்த பத்திரிகையாளரின் இழப்பு உண்மையிலேயே பத்திரிகை உலகிற்கு மிகப்பெரிய இழப்பு என்று அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும், வெவ்வேறு கருத்துகள் கொண்ட பத்திரிகையாளர்களை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயமல்ல, அது ஒரு சிலரால் மட்டுமே சாத்தியப்படக்கூடிய ஒன்று என்று பாராட்டிய அமைச்சர், தோழர் புருஷோத்தமன் பத்திரிகை உலகில் பலருக்கு அடையாளம் கொடுத்து, ஒரு நல்ல நிலையை உருவாக்கிக் காட்டி சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு உதவியுள்ளார் என்பதற்கு இங்குள்ளவர்களின் பேச்சே சாட்சி என்றார். நல்ல பத்திரிகையாளர்கள் 10 பேர் இருந்தால் போதும், ஒரு ஆட்சியையே மாற்றலாம் என்பதே இதுவரை வரலாறாக இருந்து வருகிறது என்று சுட்டிக்காட்டிய அவர், பத்திரிகையாளர் சங்கங்கள் பல பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்ற இக்கட்டான சூழலில், அனைவரையும் ஒன்றிணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வந்த புருஷோத்தமனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று புகழாரம் சூட்டினார். இவ்விழாவில் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.எம்.ஹரிஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தேசிய குழு உறுப்பினர் டாக்டர். ரவீந்திரநாத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென்சென்னை மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.ஹரி, சென்னை யூனியன் ஆப் ஜெர்னலிஸ்ட்ஸ் செயலாளர் ஷபீர் அகமது, மூத்த பத்திரிகையாளர்கள் அ.குமரேசன் மற்றும் டி.எஸ்.எஸ்.மணி ஆகியோர் கலந்துகொண்டு நெகிழ்ச்சியுடன் நினைவஞ்சலி உரை ஆற்றினர். மறைந்த தோழர் பி.எஸ்.டி. புருஷோத்தமனின் மனைவி வி.கிருஷ்ணவேணி, மகன்கள் பி.ஜவஹர், பி.சுதிந்தர், மகள் பி.பாரதி மற்றும் குடும்பத்தினர், உறவினர்கள் இந்த நிகழ்வை ஒருங்கிணைத்தனர். இவர்களுடன் முகலிவாக்கம் த.வெ.க. வட்ட செயலாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ரஜினிகாந்த், டியூஜே மாநில பொதுச்செயலாளர் கே.முத்து , அமைப்பு செயலாளர் பி.ஆர்.வேலங்கன், இணை செயலாளர் ஆர்.முருககனி, சென்னை மாவட்ட தலைவர் ம.மீ.ஜாபர், செயலாளர் எஸ்.பி.தேவேந்திரன் உள்ளிட்ட பல பத்திரிகையாளர்கள் சிபிஎம், தவெக மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்று பி.எஸ்.டி. புருஷோத்தமனுக்குத் தங்களது வீரவணக்கத்தையும் நினைவஞ்சலியையும் செலுத்தினர். படம் பிஎஸ்டி அஞ்சலி
Category: தமிழ்நாடு
எதிர்க்கட்சி தலைவராகிறாரா உதயநிதி ஸ்டாலின்?
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 73 இடங்களிலும், [மேலும்…]
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், சேலம் மாவட்டத்தின் மிக முக்கியத் தொகுதியான எடப்பாடியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் [மேலும்…]
த.வெ.க. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட 11 முக்கிய வாக்குறுதிகள்..!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக, அதிமுக, தவெக, நாதக என 4 முனைப் போட்டி நிலவியது. இதில் திமுக கூட்டணிக்கு தான் வெற்றி என [மேலும்…]
எவராலும் விஜய் ஆக முடியாது! சிபி சத்யராஜ் புகழாரம்! தமிழக அரசியல் களத்தில் மாபெரும் புரட்சி!
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) அசுர பலத்துடன் முன்னிலை பெற்று வரும் நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் வெற்றியைத் [மேலும்…]
கூட்டணிக்கு தயாராகிறதா காங்கிரஸ்? TVK விஜய்யின் வெற்றிக்கு பாராட்டு தெரிவிக்கும் பெருந்தலைகள்
திங்களன்று, தேர்தல் விளையாட்டு மனப்பான்மையை வெளிப்படுத்தும் விதமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் தனது முதல் முயற்சியிலேயே மகத்தான தேர்தல் வெற்றியைப் பெற்றதற்காக, நடிகரும் அரசியல்வாதியுமான [மேலும்…]
கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் தோல்வி!
வரலாற்றில் முதல் முறை ஆளுங்கட்சி முதல்வர் ஸ்டாலின் தோல்வியை தழுவினார். கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்ட தவெகவின் வி.எஸ்.பாபு 72,067 வாக்குகள் [மேலும்…]
“தனித்துப்போட்டி என்ற விஜய் முடிவு சரியானது”- எஸ்.ஏ.சந்திரசேகர்
விஜய்யின் வீட்டில் அவரது தந்தை சந்திரசேகர், தாய் ஷோபா உள்ளிட்டோர் விசில் அடித்தும், ஆட்டம், பாட்டத்துடனும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜயின் [மேலும்…]
11,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை… கொண்டாட்டத்தில் செங்கோட்டையன்
கோபி தொகுதி தவெக வேட்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதை தொடர்ந்து அவரது அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தமிழக சட்டமன்றத் [மேலும்…]
மூத்த நிர்வாகிகளுடன் விஜய் முக்கிய ஆலோசனை
ஆட்சியமைக்க அறுதிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேர்தல் வியூக வகுப்பாளர் ஜான் ஆரோக்கியசாமியுடன் விஜய் ஆலோசனை மேற்கொண்டுவருகிறார். நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் [மேலும்…]
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பின்னடைவு..!
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் [மேலும்…]
