ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் செல்வப்பெருந்தகை தொடர்ந்து பின்னடைவு..!

Estimated read time 0 min read

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை, ஸ்ரீபெரும்புதுார் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முன்னணியில் இருக்கிறார். தவெக வேட்பாளர் இரண்டாமிடம் பெற்ற நிலையில், செல்வப்பெருந்தகை மூன்றாம் இடத்துக்கு பின் தங்கியுள்ளார்.

யார் இந்த செல்வப்பெருந்தகை..?

ரிசர்வ் வங்கியில் கடைநிலை ஊழியர் பணியில் இருந்தவர் செல்வம். அந்த பணியில் இருந்து விலகி, புரட்சி பாரதம் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்கினார் . புதிய தமிழகம் கட்சியிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சியிலும் சிறிது காலம் இருந்தார்.விடுதலை சிறுத்தைகள் சார்பில் மங்களூர் தொகுதி எம்.எல்.ஏ., ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தவர், அதன் மாநில தலைவராகவும் பதவி வகித்தார். 

இடைப்பட்ட காலத்தில் தன் பெயரை செல்வப் பெருந்தகை என மாற்றிக்கொண்டார். 2010ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவர், 2024ல் அதன் மாநில தலைவராக நியமிக்கப்பட்டார். தேர்தல் முடிந்தபின், மாநில தலைவர் பதவியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக ஏற்கனவே அவர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author