சாமியார் கொன்று புதைப்பு – 4 பேர் கைது!

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சாமியாரை அடித்துக்கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த சாமியார் ரவி, வள்ளிமலை கிராமத்தில் உள்ள விவசாய நிலத்தில் வசித்து வந்தார்.

இவர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்யும் நபர்கள் குறித்து அவ்வப்போது துப்பு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இவரை மர்ம நபர்கள் அடித்துக் கொன்று புதைத்துவிட்டதாக தகவல் பரவியது. இதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசாருக்கு, சாமியார் அடித்துக் கொல்லப்பட்டது உண்மை என தெரியவந்தது.

இதனையடுத்து சாமியாரைக் கொலை செய்த அரிக்கிருஷ்ணன், மதன்குமார், லோகேஷ், பிரபு ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் புதைக்கப்பட்ட ரவியின் உடலை தோண்டி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author