மரத்தின் மீது மோதிய அரசு பேருந்து.. கர்ப்பிணி பெண் உள்பட 13 பேர் காயம்… கோர விபத்து…!!

சிவகங்கை மாவட்ட தேவகோட்டை பணிமனையில் இருந்து சுற்றியுள்ள 22 கிராமங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. நேற்று மதியம் காரைக்குடியில் இருந்து தேவகோட்டை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர மரத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் நடத்துனர் கண்ணன் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களில் கர்ப்பிணி பெண்ணும் ஒருவர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்காமல் இயக்குவதால் தான் விபத்து நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author