மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி விரைவு ரயில் சேவை – மத்திய அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார்!

Estimated read time 0 min read

மேட்டுப்பாளையம் – தூத்துக்குடி இடையேயான விரைவு ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

உலகப் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகவும், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய காய்கறி ஏற்றுமதி மையமாகவும் மேட்டுப்பாளையம் திகழ்ந்து வருகிறது. ஆனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்ல ஒரே ஒரு ரயில் சேவை மட்டுமே இயங்கி வருகிறது. மேலும், தூத்துக்குடியில் இருந்து கோவைக்கும், பகல் நேரத்தில் சென்னைக்கும் இயக்கப்பட்டு வந்த இணைப்பு ரெயில்கள் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது.

இதனால் அவதியடைந்த மக்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு ரயில் சேவை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அந்த வகையில் மேட்டுப்பாளையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு வாரம் இருமுறை இயங்கும் வகையில் விரைவு ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த ரயில் சேவையை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 10.50 மணிக்கும், மறு மார்க்கமாக வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.35 மணிக்கும் ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதேபோல், மைசூரில் இருந்து மயிலாடுதுறை வரை இயங்கி வந்த விரைவு ரயில் தற்போது கடலூர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் ரயில்வே சந்திப்பில் நடைபெற்ற தொடக்க விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காணொளி வாயிலாக பங்கேற்று ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுதா, எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author