முன்னுக்குப்பின் முரணாக பேசி வரும் திருமாவளவன் – டிடிவி தினகரன் குற்றச்சாட்டு!

Estimated read time 1 min read

திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதால், முன்னுக்குப்பின் முரணாக பேசி வருவதாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினரகரன் தெரிவித்துள்ளார்.

காரைக்குடியில்  செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது ; திருமாவளவன் குழப்பத்தில் உள்ளதாகவும், அதனால் அவர்  முன்னுக்குப் பின் முரணாய் பேசி வருவதாக தெரிவித்தார். திருமாவளவன் ஆட்சி, அதிகாரத்தில் பங்கு கேட்பதில் தவறில்லை என்றும் அவர் கூறினார்

கைது நடவடிக்கையை தவிர்க்க எடப்பாடி பழனிச்சாமி, திமுகவின் B டீமாக செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். எதிர்மறையாக பேசினால் விளம்பரம் கிடைக்கும் என்பதால் சீமான் தரம் தாழ்த்தி பேசி வருவதாகவும் அவர் கூறினார்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தினகரன் தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author