தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

Estimated read time 0 min read

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வரும் 22ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில், சென்னையில், ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேசமயம், தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என்றும்,

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது ஓரிரு இடங்களில் மக்களுக்கு அசௌகரியம் ஏற்படலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author