கேரளாவில் பயங்கர நிலச்சரிவு…. 8 பேர் பலி…. 500 குடும்பங்கள் சிக்கித் தவிப்பு… மீட்பு பணிகள் தீவிரம்…!!! 

Estimated read time 1 min read

கேரள மாநிலத்தில் சமீப காலமாக கன மழை பெய்து வரும் நிலையில் வயநாட்டில் பலத்த மழை பெய்து வருகிறது. அந்தப் பகுதியில் தொடர் கனமழையின் காரணமாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குறிப்பாக இந்த பகுதியில் மழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஏராளமான வீடுகள் மண்ணுக்குள் புதைந்த நிலையில் பலர் சிக்கி இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இன்று அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை என்ற பகுதியில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில், அதிகாலை 4.30 மணிக்கு மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த கோர விபத்தில் 8 பேர் பலியாகியுள்ள  நிலையில், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் இருக்கிறார்கள். தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அந்தப் பகுதியில் 500 குடும்பங்கள் வரை சிக்கியுள்ள நிலையில் ஹெலிகாப்டர் மூலமாக மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.

 

Please follow and like us:

You May Also Like

More From Author