மல்யுத்த வீராங்கனை ரீத்திகா ஹூடா 76 கிலோ மல்யுத்த ஃப்ரீஸ்டைல் போட்டியில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து, இந்தியாவின் 2024 பாரிஸ் ஒலிம்பிக் பதக்க வாய்ப்பு முழுமையாக முடிவுக்கு வந்தது.
மனு பாக்கர் வெண்கலம் வென்றதன் மூலம் ஒலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இந்திய துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார்.
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பாக 117 வீரர்கள் பங்கேற்ற நிலையில் நிலையில், இந்தியா மொத்தமாக 5 வெண்கலம் மற்றும் ஒரு வெள்ளி என 6 பதக்கங்களை கைப்பற்றியது.
இது ஒலிம்பிக்கில் இந்தியாவின் இரண்டாவது சிறப்பான செயல்பாடாகும். 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்தியா ஏழு பதக்கங்களை வென்று சாதனை படைத்ததே ஒரு ஒலிம்பிக்கில் இந்தியா பெற்ற அதிக பதக்கமாகும்.