சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கும் பிரேசில் அரசுத் தலைவர் லுலாவும் ஆகஸ்ட் 15ஆம் நாள் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்து செய்தி அனுப்பி, இரு நாட்டுத் தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 50ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடினர்.
ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் பிரேசிலும் வளர்ந்து வரும் வல்லரசுகளாகவும், புதிதாக வளரும் முக்கிய சந்தைகளாகவும் விளங்குகின்றன. கடந்த 50 ஆண்டுகளில், சர்வதேச சூழ்நிலை எவ்வாறு மாறினாலும், இரு நாட்டுறவு சீராக வளர்ந்து, தத்தமது நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்தி வரும் அதே வேளையில், உலக அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பான வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றி வருகிறது என்று சுட்டிக்காட்டினார்.
பிரேசிலுடன் இணைந்து, இரு நாட்டு தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 50ஆவது ஆண்டு நிறைவைத் துவக்கப் புள்ளியாக கொண்டு, இரு நாடுகளின் வளர்ச்சி நெடுநோக்கு திட்டங்களின் இணைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்தி, பல்வேறு துறைகளில் இரு தரப்புகளின் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை ஆழமாக்க சீனா விரும்புவதாகவும் ஷிச்சின்பிங் வலியுறுத்தினார்.
லுலா கூறுகையில், தற்போது பல துறைகளில் இரு நாடுகள் ஒத்துழைப்பு மேற்கொண்டு, மேலும் செழிப்பான, அமைதியான மற்றும் நியாயமான உலகத்தைக் கூட்டாக கட்டியமைத்து வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகாலத்தில், புதிய பாதையில் கூட்டாக முன்னேறி, பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.