தமிழகத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்…

Estimated read time 0 min read

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

குறிப்பாக நீலகிரி மற்றும் கோவை ஆகிய மலை மாவட்டங்களில் கனமழை ஒரு சில இடங்களில் பெய்கிறது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் பிறகு தமிழகத்தில் மட்டும் கன்னியாகுமரி, கோவை, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, தேனி, திருப்பூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மேலும் கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்து அறிவித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author