“உன் தியாகம் பெரியது”… சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்… முதல்வர் ஸ்டாலின்…!! 

Estimated read time 1 min read

சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது‌ ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதற்கு தற்போது முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு கொடுத்த ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அமலாக்கத்துறை ஆனது அரசியல் துறைகளை ஒடுக்கும் துறையாக தற்போது மாற்றப்பட்ட நிலையில் அதற்கு உச்சநீதிமன்றம் மட்டுமே ஒரே விடியலாக அமைந்துள்ளது.

எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை கிடையாது. அரசியல் சதி செயல்களால் 15 மாதங்கள் தொடர்ந்தது. முன்னிலும் உரம் பெற்றவராக ‌ தற்போது சிறையில் இருந்து வெளியே வரும் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் உன்னுடைய தியாகம் பெரியது. அதைவிட உன்னுடைய உறுதி பெரியது என்று பதிவிட்டுள்ளார்.

ஆருயிர் சகோதரர் @V_Senthilbalaji அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது.

அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.

எமர்ஜென்சி காலத்தில் கூட…

— M.K.Stalin (@mkstalin) September 26, 2024

Please follow and like us:

You May Also Like

More From Author