உலக அறிவுசார் சொத்துரிமை மன்றம்

சீனாவின் ஹங் சோ நகரில் முதன்முறையாக உலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு இவ்வாண்டின் அக்டோபரில் நடைபெறவுள்ளது என்று செப்டம்பர் 29ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் சீன சர்வதேச வர்த்தக முன்னேற்ற மன்றத்தின் செய்தித்தொடர்பாளர் வாங் லின் ஜியே அறிவித்தார்.

அவர் கூறுகையில், உலக அறிவுசார் சொத்துரிமை மாநாடு சீனாவில் முதன்முறையாக நடைபெறுவது சீனாவின் அறிவுசார் சொத்துரிமை இலட்சியத்தின் வளர்ச்சிக்கு முக்கிய மைல் கல்லாகும். இது அறிவுசார் சொத்துரிமை துறையில் சர்வதேசப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேற்கொள்வதற்கான அரிய வாய்ப்பாகும் என்றார்.

அறிவுசார் சொத்துரிமையின் சீரான பாதுகாப்பு மற்றும் புத்தாக்க வளர்ச்சி, இந்த மாநாட்டின் தலைப்பாகும். அறிவுசார் காப்புரிமை, வணிகச் சின்னம், பதிப்புரிமை மற்றும் அறிவுசார் சொத்து செயல் முறைகள் உள்ளிட்ட நான்கு சிறப்பு ஆராய்ச்சி பற்றிய வரைவுத் தீர்மானம் குறித்து இதில் ஆழமாக விவாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author