செங்டு(சீனா) உலக விளையாட்டுப் போட்டி 2025 க்கான தீபந்தோட்ட நிகழ்வு வருகிற ஜுலை 26ஆம் நாள் நடைபெற உள்ளதாக 12ஆவது உலக விளையாட்டுப் போட்டிக்கான ஏற்பாட்டுக் குழு 29ஆம் நாள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது. உலக விளையாட்டுப் போட்டி வரலாற்றில் தீபந்தோட்ட நிகழ்வு நடைபெறுவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
செங்டு உலக விளையாட்டுப் போட்டி 2025க்கான ஏற்பாட்டு பணிகள் குறித்து இக்கூட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
உலக விலையாட்டுப் போட்டி 2025, வருகிற ஆகஸ்ட் 7முதல் 17ஆம் நாள் வரை சீனாவின் செங்டு நகரில் நடைபெற உள்ளது. உலக விளையாட்டுப் போட்டி, ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, FISU உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி ஆகியவை, உலகளாவிய பன்நோக்கு தன்மை வாய்ந்த மூன்று பெரிய விளையாட்டுப் போட்டிகளாக திகழ்கின்றன.
இதில், உலக விளையாட்டுப் போட்டியானது, ஒலிம்பிகில் சேர்க்கப்படாத விளையாட்டுகளுக்கு மிக உயர் நிலையிலான சர்வதேச பன்நோக்க தன்மை வாய்ந்த விளையாட்டுப் போட்டி ஆகும்.
170க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 5000க்கு அதிகமான விளையாட்டு வீரர்கள் நடப்பு உலக விளையாட்டுப் போட்டியில் பங்கெடுக்க கூடும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.