ஆண்கள் மட்டுமே வழிபடும் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா!

Estimated read time 0 min read

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே ஆண்கள் மட்டுமே வழிபடும் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்பது வழக்கமாக உள்ளது.

இந்நிலையில், இந்தாண்டு திருவிழாவையொட்டி இரவில் 28 கிடாய்களை பலியிட்டு ஆண்கள் மட்டும் வழிபாடு செய்தனர். ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த திருவிழாவிற்கு கமுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வருகை தந்தனர்.

திருவிழாவை தொடர்ந்து படையிலடப்பட்ட பிரசாதத்தை பெண்கள் பார்க்கக்கூடாது என்பதால் மீதமிருந்த உணவு அங்கேயே புதைக்கப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author