முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் தவிர்ப்பது மிக அவசரமானது – சீனா

முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் தவிர்ப்பது மிக அவசரமானது – சீனா

கொரியத் தீபகற்பத்தின் நிலைமை மற்றும் வட-தென்கொரிய உறவின் மாற்றம் ஆகியவற்றில் சீனா கவனம் செலுத்தி வருகிறது. கொரியத் தீபகற்பத்திலுள்ள பதற்றம், பல்வேறு தரப்புகளின் பொதுவான நலனுக்கு பொருத்தமற்றது. எனவே, முரண்பாட்டை மேலும் தீவிரமாக்காமல் தவிர்ப்பது மிக அவசரமானது என்று சீனா கருதுகிறது.
சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் மாவ் நிங் 15ஆம் நாள் செய்தியாளர் சந்திப்பில் கொரியத்தீபகற்பத்தின் பதற்ற நிலைமை குறித்து இதைத் தெரிவித்தார்.
கொரியத்தீபகற்பத்தின் அமைதி மற்றும் நிலைத்தன்மையைப் பேணிக்காக்க சீனா பாடுபடும். அரசியல் ரீதியான தீர்வு காண்பதில் சீனாவின் நிலைப்பாடு மாறவில்லை. அதேவேளையில் பல்வேறு தரப்புகளும் இதற்காக கூட்டு முயற்சி மேற்கொள்ள வேண்டுமென நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author