நாளை உருவாகும் புயல்… 10 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை.!

Estimated read time 1 min read

சென்னை : மத்தியகிழக்கு வங்ககடல்,வடக்கு அந்தமான் கடல்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாகவும், 48 மணி நேரத்தில் தீவிரப்புயலாகவும் வலுப்பெறும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

அதன்படி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யலாம் எனக் குறிப்பிட்டுள்ளது. நாளையும் கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.

சென்னை நிலவரம்

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதிகபட்ச வெப்பநிலை 34 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Please follow and like us:

You May Also Like

More From Author