அமெரிக்க அதிபர் ஜோ பைடன், கடந்த திங்கட்கிழமை வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.
இந்த நிகழ்வில் 600க்கும் மேற்பட்ட இந்திய-அமெரிக்கர்கள், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பிக்கள், அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளின் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
வெள்ளை மாளிகையின் நீல அறையில் தீபத்தை ஏற்றி வைத்து, “ஜனாதிபதி என்ற முறையில், வெள்ளை மாளிகையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய தீபாவளி நிகழ்ச்சியை நடத்துவதில் நான் பெருமைப்படுகிறேன். இது எனக்கு மிக முக்கியம். தெற்காசிய சமுதாயம், கமலா ஹாரிஸ் முதல் டாக்டர் மூர்த்தி வரை, என் நிர்வாகத்தில் முக்கிய உறுப்பினர்களாக உள்ளனர். அமெரிக்காவில் இப்படியான ஒரு சிறப்பான நிர்வாகத்தை கொண்டிருப்பதற்கு பெருமை கொள்கிறேன்” என்றார் பைடன்.