“வசந்த விழா: சீன மக்கள் பாரம்பரிய புத்தாண்டைக் கொண்டாடும் சமூக நடைமுறையாக்கம்” என்பது, யுனெஸ்கோவின் மனிதகுல பொருள் சாரா பண்பாட்டு மரபுச் செல்வத்தின் பிரதிநிதித்துவப் பட்டியலில் டிசம்பர் 4ஆம் நாள் சேர்க்கப்பட்டது.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் 5ஆம் நாள் கூறுகையில், வசந்த விழாவானது, சீனாவின் மிக தொன்மை வாய்ந்த மற்றும் முக்கியமான பாரம்பரிய விழாவாகும்.
சீனத் தேசம் மற்றும் சீன நாகரிகத்தில் அமைதி, சுமுகம், இணக்கம் ஆகிய கருத்துகளை இது வெளிப்படுத்தியுள்ளது. இதுவரை, உலகத்தில் சுமார் 20 நாடுகள் சீனப் பாரம்பரிய புத்தாண்டை, சட்டரீதியான விடுமுறையாக உறுதிப்படுத்தியுள்ளன என்றார்.
மேலும், சீனப் பாரம்பரிய பாம்பு ஆண்டு விரைவில் வரவுள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் சீனாவில் வண்ணமயமான வசந்த விழா பண்பாடுகளை அனுபவிப்பதை வரவேற்கிறோம். உலகத்தில் பல்வகை நாகரிகங்கள் இணக்கமாக நிலவி, பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் புரிந்துணர்வை அளிக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.