சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் டிசம்பர் 9ஆம் நாள் முற்பகல் பெய்ஜிங்கில் புதிய வளர்ச்சி வங்கித் தலைவர் தில்மா ரோசேஃப், உலக வங்கித் தலைவர் அஜெய் பன்கா, சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை இயக்குநர் ஜோர்ஜியேவா, உலக வர்த்தக அமைப்பின் பொது இயக்குநர் இவேலா, ஐ.நா வர்த்தக மற்றும் வளர்ச்சி குழுவின் தலைமைச் செயலாளர் அலன் கரீன்ஸ்பன் முதலிய 10 சர்வதேச பொருளாதார அமைப்புகளின் பொறுப்பாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியான் 6ஆம் நாள் தெரிவித்தார்.
“சீர்திருத்தத்தின் வாய்ப்பை இறுகப்பற்றி, உலகப் பொருளாதார வளர்ச்சி முறை மாற்றம் மற்றும் அதிகரிப்பை முன்னேற்றுவது”, “பலதரப்புவாதத்தில் ஊன்றி நின்று, உலகளாவிய பொரளாதார மேலாண்மை அமைப்பு முறை சீர்திருத்தத்தை முன்னேற்றுவது”, “சீர்திருத்தத்தை சீனா மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, நவீனமயமாக்கத்தின் பரந்துபட்ட எதிர்காலத்தைத் திறந்து வைப்பது”ஆகிய மூன்று அம்சங்கள் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் பரிமாற்றம் மேற்கொள்ளவுள்ளனர் என்று தெரிய வருகிறது.