சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14வது தேசிய கமிட்டியின் 4வது கூட்டத்தொடரின் 3ஆவது முழு அமர்வில், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தேசியக் கமிட்டியின் உறுப்பினர் பான்சென் லாமா எர்டேனி நோர்பு, மார்ச் 8ஆம் நாள் உரை நிகழ்த்தினார். அவர் கூறுகையில், திபெத் மரபுவழி புத்தமதத்தின் வெளிக்கொணர்வர்கள் மற்றும் பயிற்சியாளர்களாக திகழ்கிறோம். நாட்டின் செழுமை மற்றும் நிலைப்பு, மதத்தைச் சீராக வெளிக்கொணர்வதன் அடிப்படை உத்தரவாதம் ஆகும் என்றும், சீனத் தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சி, மத நம்பிக்கை கொண்ட மக்கள் மற்றும் மத நம்பிக்கை இல்லாத மக்களின் கூட்டு நலன் ஆகும் என்றும் நாங்கள் ஆழமாக உணர்ந்து கொள்கிறோம் என்றார்.
மேலும், கடந்த சில ஆண்டுகளாக, கட்சி மற்றும் அரசின் கவனம் மற்றும் ஆதரவுடன், திபெத் மரபுவழி புத்தமதத் துறையினர்கள், சோஷலிசச் சமூகத்துடன் ஒருங்கிணைந்த வளர்ச்சி முறையை ஆக்கமுடன் ஆராய்ந்து, நல்ல முன்னேற்றத்தைப் பெற்றனர். கோயில் நிர்வாகத்தின் சட்டப்பூர்வமயமாக்கம் மற்றும் ஒழுங்குமுறைமயமாக்க நிலை உயர்ந்து வருகிறது. துறவி திறமைசாலிகளின் வளர்ச்சி அமைப்புமுறை மேம்படுத்தப்பட்டு வருகிறது. திபெத் மரபுவழி புத்தமதம், வெளிக்கொணரப்படதன் மூலம், நன்றாகப் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
