சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் மார்ச் 23ம் நாள் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் தேசிய தினம் குறித்து, பாகிஸ்தான் அரசுத் தலைவர் அசிஃப் அலி சர்டாரிக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.
ஷிச்சின்பிங் கூறுகையில், பாகிஸ்தான் அரசும் மக்களும், பல்வேறு சவால்களைச் சமாளித்து, பிராந்திய அமைதி நிதானம், வளர்ச்சி, செழுமை ஆகியவற்றை முன்னேற்றி வருகின்றனர். சர்வதேச நிலைமை எவ்வாறு மாறினாலும், சீன-பாகிஸ்தான் உறவுக்குத் தூதாண்மை முன்னுரிமை சீனா கொடுக்கும். இரு நாட்டு உறவின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகிறேன். அரசுத் தலைவர் சர்டாரியுடன் இணைந்து, புதிய யுகத்தில் மேலும் நெருங்கிய சீன-பாகிஸ்தான் பொது எதிர்கால சமூகத்தைக் கட்டியெழுப்ப விரும்புகிறேன் என்று தெரிவித்தார்.
அதே நாள் சீன தலைமை அமைச்சர் லீச்சியாங், பாகிஸ்தான் தலைமை அமைச்சருக்கு வாழ்த்து செய்தி அனுப்பினார்.