நூறு ஆண்டுகளில் இல்லாத பெரிய மாற்றத்தை எதிர்கொண்டு, சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் “புதிய வளர்ச்சி கட்டமைப்பை உருவாக்க வேண்டும்” என்ற நெடுநோக்கு திட்டத்தை முன்வைத்தார்.
இரட்டை சுழற்சி முறை என அழைக்கப்படும் இத்திட்டமானது, உள்நாட்டின் பெரிய சுழற்சி முறை பொருளாதாரத்தை முக்கியமாகக் கொண்டு, உள்நாட்டு மற்றும் சர்வதேச சுழற்சி முறை பொருளாதாரங்கள் ஒன்றுக்கொன்று முன்னெடுப்புகளைக் குறிக்கிறது.
கடந்த 40ஆண்டுகளில், விற்பனைச் சந்தை, மூலவளம் ஆகிய இரண்டு பகுதிகளும் வெளிநாட்டில் உள்ளன என்ற முறை மூலம், சீனாவின் பொருளாதாரம் விரைவாக வளர்ச்சி அடைந்து, நாட்டின் ஒட்டுமொத்த ஆற்றலும் மக்களின் வாழ்வாதார நிலையும் உயர்ந்துள்ளன. ஆனால் அதே நேரத்தில், சீனா இரண்டு பெரிய அறைக்கூவல்களை சந்தித்துள்ளது.
அதாவது, சர்வதேச சந்தையை அளவுக்கு மீறி சார்ந்திருந்தால் இடர்பாட்டை சமாளிப்பதற்கான திறன் குறைவு.உலகளாவிய தொழில் சங்கிலியின் நடுத்தர மற்றும் தாழ்வான மட்டத்தில் இருந்தால் முக்கிய தொழில் நுட்பம் வளர்ச்சித் தடை செய்யப்பட்டுள்ளது.
தவிர, 40ஆண்டுகள் கடந்து விட்டது. சீனாவின் உள்நாட்டு நிலைமையும் சர்வதேச சூழ்நிலையும் அதிகமாக மாறியுள்ளன. சீனாவில் இடைநிலை வருமானம் கொண்ட மக்களின் எண்ணிக்கை 40கோடியை தாண்டியது. பொது மக்களின் வாழ்க்கை தேவை மேம்பாடு அடைந்துள்ளது. சர்வதேச சூழ்நிலையைப் பார்த்தால், உலகமயமாக்கலுக்கு எதிர் நடவடிக்கை மற்றும் வர்த்தக பாதுகாப்புவாதம் தலைதூக்குகின்றது. இந்த நிலைமையில், விற்பனை சந்தை, மூலவளம் என இரண்டு பகுதிகளும் வெளிநாட்டில் உள்ளன என்ற முறையிலிருந்து, இரட்டை சுழற்சி முறை ஆக மாற்றி கொள்ள சீனா வேண்டியிருக்கின்றது.
புதிய வளர்ச்சி கட்டமைப்பின் உருவாக்கம் குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில், தன்னைச் சார்ந்திருப்பதன் மூலம், உள்நாட்டின் பெரிய சுழற்சி முறைப் பொருளாதாரத்தை வளர்த்தால் தான், சர்வதேச சூழ்நிலையில் ஏதோ மாற்றம் ஏற்படும்போது தனது உயிராற்றலைக் கொண்டு தன்னை தொடர்ந்து வளர்க்க முடியும் என்று தெரிவித்தார். மேலும், அவர் நடைமுறைகளில் புத்தாக்க ஆற்றலுக்கு மிகவும் முக்கியத்துவம் அளிக்கின்றார்.
சீனப் பொருளாதாரத்துக்கு உவமையாக ஒரு கடல் ஆகும், ஒரு சிறிய குளம் அல்ல என்று ஷிச்சின்பிங் கூறியிருந்தார். தற்போது, சீனப் பொருளாதாரமானது, இரட்டை சுழற்சி முறை என்ற புதிய வழியில், உலகிற்கு நிதானத் தன்மை மற்றும் வாய்ப்புகள் கொண்டு வந்துள்ளது. புதிய வளர்ச்சி கட்டமைப்பானது, மூடிய கதவாக செயல்பட்டாமல், மேலும் உயர் நிலையிலான திறப்பு மூலம், பல்வேறு நாடுகள் சீனச் சந்தையிலிருந்து கூட்டாக நலன்களைப் பகிர்ந்து கொள்ளலாம்.