தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு உள்துறை அமைச்சகம் (MHA) கடிதம் எழுதியுள்ளது.
எதிரி தாக்குதல்கள் அல்லது போர் போன்ற சூழ்நிலைகள் உட்பட தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள் ஏற்படும் சூழலில், உள்துறை அமைச்சகத்தின் இந்த வேண்டுகோள் வந்துள்ளது.
அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்
