காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் மீது பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Estimated read time 0 min read

பீகார் தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்காகக் காங்கிரஸ் மற்றும் ஆர்ஜேடி தலைவர்கள் தன்னை அவமரியாதை செய்துவிட்டதாகப் பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

பீகார் மாநிலம் முசாபர்பூரில் தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பொன்னாடை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைதொடர்ந்து பேசிய அவர், சாத் பண்டிகை என்பது நாடகம் என்று காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் கூறியுள்ளதாகவும், பீகார் மக்கள் இந்த அவமானத்தைப் பல ஆண்டுகளாக மறக்கமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.

வாக்குகளைப் பெறுவதற்காகக் காங்கிரஸ், ஆர்ஜேடி தலைவர்கள் தன்னை அவமரியாதை செய்துவிட்டார்கள் என்றும், சாத் பண்டிகைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற முயற்சிப்பதாகவும் பிரதமர் மோடி கூறினார்.

ஊழல், கொடுமை, தவறான ஆட்சி உள்ளிட்டவை தான் ஆர்ஜேடியின் காட்டாட்சி ராஜ்ஜியத்தின் ஐந்து அடையாளங்கள் என்று கடுமையாகச் சாடிய பிரதமர், மாநில வளர்ச்சியை உறுதி செய்வதற்கு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு முன்னுரிமை அளிப்பதாகவும் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author