நாடு முழுவதும் வெளியானது சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள்

Estimated read time 1 min read

மாணவர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்த சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின.

சமீபத்தில் தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. இந்த தேர்வில் 95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று இருந்தனர்.

இந்த நிலையில், சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாடு முழுவதும் வெளியாகின. சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வில் மொத்தம் 88.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்சி பிளஸ் 2 பொது தேர்வை மொத்தம் 16,92,794 மாணவர்கள் எழுதிய நிலையில், அதில் 14,96,307 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு 0.41 சதவீத மாணவர்கள் அதிகமாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in மற்றும் results.cbse.gov.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலேயே அதிகபட்சமாக விஜயவாடாவில் அதிகளவிலான மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கு அடுத்தபடியாக திருவனந்தபுரம் இரண்டாவது இடத்திலும், சென்னை மூன்றாவது இடத்திலும் உள்ளன. சிபிஎஸ்சி பிளஸ் 2 தேர்வு முடிவில் சென்னையில் மட்டும் 97.39 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author