இன்னும் பத்து ஆண்டுகளில் மனிதர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்திடம் தங்களது கட்டுப்பாட்டை முழுமையாக இழப்பார்கள் என்று பிரபல தொழில் அதிபர் எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.
2036 ஆம் ஆண்டிற்குள் ரோபோக்கள் மற்றும் ஏஐ அமைப்புகள் உலகை வழிநடத்தும் நிலைக்கு உயரும் என்று அவர் கணித்துள்ளார்.
மேலும், ஏஐ தொழில்நுட்பத்தால் மனிதகுலம் முற்றிலும் அழிய 10 முதல் 20 சதவீதம் வரை வாய்ப்புள்ளதாகவும் அவர் ஒரு சமீபத்திய பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
2036க்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை ஏஐ இழக்கும்: எலான் மஸ்க் எச்சரிக்கை
