நடிகர் மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது..!

Estimated read time 1 min read

இந்தியாவின் மிக உயர்ந்த திரைப்பட விருதான தாதாசாகேப் பால்கே விருது சூப்பர் ஸ்டார் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த விருது செவ்வாய்க்கிழமை நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். இந்திய சினிமாவிற்கு மோகன்லாலின் பங்களிப்பைப் பாராட்டி, தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் (MIB) இந்த விருதை அறிவித்துள்ளது.

இது குறித்து தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட உள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாதாசாகேப் பால்கே விருது தேர்வுக் குழுவின் பரிந்துரையின் பேரில், மோகன்லாலுக்கு 2023ம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது. மோகன்லாலின் குறிப்பிடத்தக்க சினிமா பயணம் வருங்கால தலைமுறையினரை ஊக்குவிக்கும்.

இந்திய சினிமாவுக்கு அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பிற்காக புகழ்பெற்ற நடிகர், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கவுரவிக்கப்படுகிறார்.

இந்த விருது வரும் செப்டம்பர் 23ம் தேதி நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author