மேலும் 5 நாடுகளுக்கு விசா விலக்கு அளிக்க சீனா முடிவு

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் மே 15ஆம் நாள் கூறுகையில், விசா விலக்கு கொள்கையை மேலும் 5 நாடுகளுக்கு விரிவுபடுத்த சீனா முடிவு செய்துள்ளது. அதன்படி, 2025ஆம் ஆண்டு ஜுன் முதல் நாள் தொடங்கி 2026ஆம் ஆண்டு மே 31ஆம் நாள் வரை, பிரேசில், அர்ஜென்டீனா, சிலி, பெரு, உருகுவே ஆகிய நாடுகளின் சாதாரண கடவுச்சீட்டு பயணிகளுக்கு விசா விலக்கு அளிக்கப்படும் என்றார்.

இந்த 5 நாடுகளைச் சேர்ந்த பயணிகள் வணிகம் செய்தல், சுற்றுலா பயணம் மேற்கொள்தல், நண்பர்கள் மற்றும் குடும்பதினர்களைப் பார்த்தல், பரிமாற்ற நிகழ்வுகளில் பங்கெடுத்தல் ஆகிய காரணங்களுக்காக சீனாவுக்கு வந்து 30 நாட்கள் வரை விசா இன்றி தங்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author