சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷிச்சின்பிங் சமீபத்தில், 15ஆவது ஐந்தாண்டு திட்டம் வகுக்கும் பணி குறித்து, முக்கிய உத்தரவிட்டார்.
இதில் ஐந்தாண்டு திட்டத்தை அறிவியல்பூர்வமாக வகுப்பது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மேலாண்மைக்கான முக்கிய அனுபவங்களில் ஒன்றாகும்.
மேலும், இது, சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிசத்தின் முக்கிய அரசியல் மேம்பாடாகும்.
இத்திட்டத்தை வகுத்துச் செயல்படுத்துவது, சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாட்டின் முக்கிய ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தி, சீனத் தனிச் சிறப்பு வாய்ந்த நவீனமயமாக்கத்தை விரைவுபடுத்துவதில் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்.