அண்மையில் சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவர் பல முறைகளில் இரு கரையுறவு குறித்து உரை நிகழ்த்தினார்.
இது குறித்து சீன அரசவை தைவான் விவகார பணியகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறுகையில்,
தைவான் சுதந்திர சக்தி, தைவான் நீரிணையின் அமைதியின் எதிரியாகும். இரு கரைகளுக்கிடையிலான பரிமாற்றங்களை வலுப்படுத்துவது, பதற்றமான நிலைமையைத் தணிவுப்படுத்த முடியும்.
இரு கரைகள் ஒரே சீனாவைச் சேர்ந்ததை ஏற்றுக்கொண்டால், பேச்சுவார்த்தை நடைபெறலாம். தைவான் சுதந்திரத்தில் ஊன்றி நிற்பதோடு, ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிக்கும் நிலையில் பெரு நிலப்பகுதியுடன் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அண்மையில் தைவான் பிரதேசத்தின் தலைவர் உரை நிகழ்த்திய போது, தெரிவித்தார்.
தைவான் பிரதேச தலைவர் என்ன பேசினார் என்பது பரவாயில்லை. தைவான் சீனாவின் ஒரு பகுதியாக இருக்கும் என்ற உண்மை மாறாது. இரு கரையுறவு முன்னேறும் போக்கை இது மாற்றாது. சீனாவின் ஒன்றிணைப்பு போக்கு நிற்காது என்றார்.