சென்னையில் பல்வேறு புதிய நவீன வசதிகளுடன் மின்சார பேருந்துகள் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. இதன்படி, பேருந்தின் உள்ளே மொத்தம் 7 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்கள் மூலம் பேருந்தின் உள்ளே வெளியே என்று அனைத்தையும் கண்காணிக்க முடியும்.
சென்னையில் முதல் கட்டமாக 5 பணி மனைகளில் இருந்து 625 மின்சார பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து கழகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாசர்பாடி பணிமனையில் மின்சார பேருந்துகளுக்கான சார்ஜிங் நிலையத்திற்கான உட்கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மொத்தம் 32 சார்ஜிங் நிலையங்கள் வியாசர்பாடி பணிமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
240 கிலோ வாட் திறன் கொண்ட ஒரு சார்ஜிங் நிலையத்தின் மூலம் ஒரு மின்சார பேருந்தை ஒன்றரை மணி நேரத்தில் முழுவதுமாக சார்ஜ் செய்ய முடியும். இந்த சார்ஜிங் நிலையங்களுக்கு மின்சாரம் வழங்குவதற்காக தலா 33 கிலோ வோல்ட் திறன் கொண்ட நான்கு டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டு வருகிறது. ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 4 சார்ஜிங் நிலையங்களுக்கு தேவையான மின்சாரத்தை வழங்க முடியும். ஒரு முறை சார்ஜ் செய்தால் 250 கிலோ மீட்டர் வரை பேருந்தை இயக்க முடியும் என்று தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்தனர்.
சென்னையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ள மின்சார பேருந்துகள் ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கும் பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்சாரப் பேருந்துகள் முழுவதும் ஆட்டோமேட்டிக் முறையில் இயங்குவதால் ஓட்டுநர்களின் சிரமம் பெரிய அளவிற்கு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 39 பயணிகள் மற்றும் ஒரு ஓட்டுநர் என்று மொத்தம் 40 இருக்கைகள் கொண்ட இந்த பேருந்தில் இருக்கைகளுக்கு அடியில் சார்ஜிங் போடுவதற்கான போடுவதற்கான போர்ட் வசதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கான இருக்கைகளை தனித்து அடையாளம் காணும் வகையில் வெள்ளை நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. மற்ற இருக்கைகள் அனைத்தும் நீல நிறத்தில் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பு வசதிக்காக ஒவ்வொரு இருக்கையிலும் சீட் பெல்ட் வசதி உள்ளது. இந்த பேருந்துகளால் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிக்னல்களில் கியர் மாற்றி பேருந்து இயக்க வேண்டிய பிரச்சனை இருக்காது.
எளிதாக பேருந்துகளை இயக்க முடியும் எனக் கூறப்படுகிறது. இதை தவிர்த்து ஓட்டுனருக்கு முன்பாக உள்ள திரையில் கண்காணிப்பு கேமரா காட்சிகள் மற்றும் அடுத்த நிறுத்தம் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள முடியும். இதை தவிர்த்து மாற்றுத்திறனாளிகள் ஏரி மற்றும் இறங்குவதற்கு கதவுகள் உள்ள இடதுபுறத்தை ஏற்றி இறக்கும் வகையில் இந்த பேருந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.