“இனி UPSC தேர்வுக்கு விண்ணப்பிக்க இது கட்டாயம்”… மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!!! 

Estimated read time 0 min read

மாநில அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் அஜய்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது இனி வரும் காலங்களில் யூபிஎஸ்சி தேர்வுகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க ஆதார் அட்டை அவசியம் என்று கூறினார்.

தேர்வுகள் வெளிப்படை தன்மையுடன் நடைபெற வேண்டும் என்று தொடர்ச்சியாக அறிவுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும் நிலைக்குழு கூட்டத்தில் அரசு பணிக்கான தேர்வுகளின் முக்கிய அம்சங்களை பற்றியும் விவாதிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் 12 மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author