வங்காளத்தேசத்தைச் சேர்ந்த 3 டன் மாம்பழங்கள் மே 28ஆம் நாளிரவு விமானத்தின் மூலம் டாகா நகரத்திலிருந்து சீனாவின் ச்சாங்ஷா நகரைச் சென்றடைந்தன. வங்காளத்தேசத்திலிருந்து மாம்பழங்களை சீனா இறக்குமதி செய்வது இதுவே முதல் முறை. இரு நாட்டு வேளாண் துறையின் ஒத்துழைப்பு புதிய சாதனையை எட்டியுள்ளது இது காட்டுகிறது.
முன்னதாக, வங்காளத்தேசத்தின் மாம்பழங்கள், குறிப்பாக மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டதற்குப் பிறகு, முதலாவது ஆண்டில் ஏற்றுமதி அளவு 100 டன்னை எட்டக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.