சீனாவில் மே 4ஆம் நாள் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்ட பயணங்களின் மொத்த எண்ணிக்கை ஒரு கோடியே 97லட்சத்து 86ஆயிரத்தை எட்டியுள்ளது.
விடுமுறை காலம் முடிந்து மே 5ஆம் நாள், சுமார் 2கோடியே 11லட்சமான பயணிகள் ரயில் மூலம் திரும்பியுள்ளனர்.
ஏப்ரல் 29ஆம் நாள் முதல் மே 4ஆம் நாள் வரையான தின விடுமுறைக் காலத்தில் 11கோடியே 20லட்சம் பயணங்கள் ரயில் மூலம் மேற்கொள்ளப்பட்டன. இது கடந்த ஆண்டை விட, 10.5விழுக்காடு அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் சீரான பயணம் மற்றும் பாதுகாப்புக்கான ஏற்பாடுகள் பல்வேறு இடங்களில் நன்கு செய்யப்பட்டிருந்தன.