அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாஜ தமிழ்நாட்டில் மீண்டும் மாஸ்க் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சுவாச நோய்த்தொற்றுகளை தடுக்க இது உதவும் என அனைத்து மாவட்ட சுகாதார அலுவலகர்களுக்கும் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.