தமிழகத்தில் கோடை வெயில் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், ஒரு நிம்மதியான செய்தியை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.
வட ஒடிசா முதல் தென் தமிழகம் வரை நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, அடுத்த 6 நாட்களுக்குத் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இந்த மழையை எதிர்பார்க்கலாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
