ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை!

Estimated read time 1 min read

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த மாதம் 28-ம் தேதி ஞானசேகரன் குற்றவாளி எனச் சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

மேலும், தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி அறிவிக்கப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்திருந்தது. அதன்படி, ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

30 ஆண்டுகளுக்குக் குறையாத ஆயுள் தண்டனையும், 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளி ஞானசேகரனுக்கு எந்த சலுகையும் வழங்கக் கூடாது என நீதிபதி ராஜலட்சுமி கண்டிப்புடன் தெரிவித்துள்ளார்.

மேலும், இத்தனை நாட்கள் சிறையில் இருந்த காலத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

Please follow and like us:

You May Also Like

More From Author