அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் அண்மையில் மோதல்கள் ஏற்பட்டன. உள்நாட்டில் ஏற்பட்ட கலவரங்கள் காரணமாக அமெரிக்கர்கள் கவலைப்படுகின்றனர் என்று பிரிட்டனின் மிரர்(mirror) நாளேடு தெரிவித்துள்ளது.
சீன ஊடக குழுமத்தின் சி.ஜி.டி.என் உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, சட்டவிரோத குடியேறுவோர் பிரச்சினை, ஜனநாயகக் கட்சி ஆளும் லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ளிட்ட உள்ளூர் அரசுகளுக்கும், குடியரசுக் கட்சி ஆளும் கூட்டாட்சி அரசுக்கும் இடையிலான முரண்பாடுகளை வெடித்தன என்று 89.6 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
மேலும், குடியேறுவோர் கொள்கைகள் பற்றிய இரு கட்சிகளுக்கிடையிலான மோதல்கள், அமெரிக்காவின் அரசியல் துருவமுனைப்பை வெளிப்படுத்தியுள்ளது என்று 89 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
தவிரவும், சட்டவிரோத குடியேறுவோர்களை நாட்டைவிட்டு வெளியேற்றுவதற்கு அமெரிக்க அரசு மேற்கொண்ட நடவடிக்கை, வன்முறை சட்ட அமலாக்கமாக மாறி, கடும் மனித நேய நெருக்கடியை ஏற்படக்கூடும் என்று 71.8 விழுக்காட்டினர் தெரிவித்தனர்.
இந்தக் கருத்துக் கணிப்பு ஆங்கிலம், ஸ்பெனிஷ், பிரெஞ்சு, அரபு, ரஷியா உள்ளிட்ட 5 மொழிகளில் நடத்தப்பட்டது. 24 மணி நேரத்துக்குள் 6054 பேர் இதில் கலந்து கொண்டனர்.